Tuesday, 3 March 2015

மதம் மனிதனுக்கு தேவையா?

அக் காலத்தில் மன்னராட்சி முறையில் உருவாக்கப்பட்ட குடும்ப முறைகளை சார்ந்து ,அதனை வைத்து மதங்களும் தங்களுடைய
 குடும்பமுறைகளில் சட்டங்களை
புகுத்திக்கொண்டதின் விளைவாக
வழிவழியாக வந்த மன்னர் வம்சங்-களும் அவர்களுக்கு சாதகமான
முறையில் பல மதங்களிலும் குடும்ப
முறைகளிலும் சட்ட திட்டங்களும்
சாதகமானவைகளாக கையாளப்-
பட்டன.பாதகமாக உருவாக்கும்
மத தோற்றுவிப்பவர்களை உயிர்
சேதம் செய்ய தயங்காத மன்னர்கள்
இருந்ததே இதற்கு காரணம்.
ஆக மன்னர் வம்சங்கள் அதற்கு
துணை போன மதங்கள் இவை தான்
காலங் காலமாக நாம் கண்ட வழி
முறைகள்,இதன் காரணமாக வம்சாவளி அதிகாரம்,பரம்பரையாக
செல்வங்களை தக்கவைத்துக்
கொள்ளும் உரிமை,அதற்கு
பாதுகாப்பு என மன்னர்களை
ஆதரித்து மதங்களும் ,மதங்களை
ஆதரித்து மன்னர்களும்,இல்லாத-வர்களை சார்ந்து இருக்கப்பட்டவர்-களாக வாழ்ந்து. இவ்வுலகை ஆளுமை செய்ய முடிந்தது.

மண்ணிற்காகவும் பெண்ணிற்காக-வும் நாடு பிடிக்கும் ஆசையில்
போரிட்ட மன்னர்கள் ஏராளம்
பலியான மக்கள் கோடானுகோடி
இந்த மன்னர்களின் கௌரவம்,
சிந்தனை,கொள்கைகள்,பாதுகாப்பு
போன்றவற்றை பாதுகாக்க பிறந்த-வர்களாகவே பொதுமக்கள்
வாழ்க்கை இருந்தது.இவ்வகையில்
ஏற்றதாழ்வுகளுடன் பிறக்க வைத்தது
மன்னரின் குடும்பத்தையும்,நாட்டை
காப்பாற்றுவதும் ஒன்று, என்ற
சிந்தனையையே கடவுளின் பெயரை
வைத்து மதவாதிகளை துணைக்கு
வைத்துக்கொண்டே பொதுமக்களை
ஆண்டுவந்தனர்.நீதி என்பது மன்னர்
வசமிருந்ததால் , இன்று உள்ளது
போல் பணம் வைத்துக்கொண்டு
நீதியை பெற தேவையில்லை,
மன்னனிடம் கைகட்டி ,காலில் விழுந்து வணங்கி முறையிட்டாள்
போதும் சபையை கூட்டி தீர்ப்பும்
கிடைத்து விடும்.அது குற்றவாளிக்கு
சாதகமா அல்லது பாதகமா என்று
கூற முடியாது,மன்னனுக்கு என்ன
தோன்றுகிறதோ அது தான் தீர்ப்பு,
அதை யாராவது தவறு என கூறினால் தலை துண்டிக்கப்படும் .
ஆக தீர்ப்பை தவறென்று கூறவோ ,
மேல் முறையீடு செய்யவோ வழி
இல்லாத ஒரு நபர் வம்சாவளி
அதிகாரத்தில் பிறந்த ஆட்சி அமைப்பு.இவ்வாறு பெருநிலமன்னர்
-கள் ,குறுநில மன்னர்கள் ,இந்து
மன்னர்கள்,இசுலாமிய மன்னர்கள்
என்று கடந்த 300- ஆண்டுகளுக்கு
முன்பு வரை அடிமைப்படுத்தி வாழ்ந்த வேலைகளில் இவர்களை
எதிர்த்து மக்களாட்சி வேண்டும்
என்று கேட்ட போரிட்ட மதவாதிகள்
உண்டா?இல்லை அந்த சுதந்திர
உணர்ச்சியை ஊட்டிய மதம் தான்
உண்டா?அல்லது மதவாதிகள் தான்
உண்டா? இல்லையே,இவர்களிடம்
மக்களாட்சி கேட்க முடியுமா?பெண்
உரிமை கேட்க முடியுமா? கேட்டாலும்
உயிரோடு இருந்தவர்கள் உண்டா?
ஓய்வூதியம் பெற்றவர் உண்டா?
விடுப்பு க்கு ஊதியம் பெற்றவர் உண்டா? மன்னரின் அதிகாரத்தில்
வாழும் ஊழியர்களிடமாவது
எதிர்த்து கேள்வி கேட்க முடியுமா?
ஆக இவையெல்லாம் எவ்வாறு
நமக்கு கிடைத்தன.உலகமெல்லாம்
தன் ஆதிக்கத்தில் இருக்க வேண்டும்
என்ற மண்ணாசையால் போட்டி
போட்டு உலக அழிவிற்கு வித்திட்ட
இரண்டாம் போருக்கு பின் அதுவும்
ஆங்கிலேய அரசு இருந்த படியாலும்
நம் நாட்டு தலைவர்கள் போராடி
பெற்ற சுதந்திரம்,அதன் மூலம்
உருவான சனநாயகம்.இதன்
விளைவாக மக்களாக இருந்தவர்கள்
பதவிகளை அடையும் வேளையில்
மதத்தை. சார்ந்தவர்கள் நுழைய
என்ன தகுதி,என்ன உரிமை இருக்கி-றது.மற்றும் தொழிலாளர்கள் வேலை
உரிமைகள் பெறப்பட்டு,மக்களாட்சி
சோசலிச கொள்கைகளை மறந்து,
அல்லது இன்றைய தலைமுறைகள்
பழைய வரலாறுகளை அறியாமலும்,மறைக்கப்பட்டும்
வளரும் காரணங்களாலும்,வெறும்
மத புராணங்களை கூறியே,வேற்று
மத வெறுப்புணர்வுகளை பரப்பி
அதில் தங்களுடைய கடவுள்களை
நிலைநிறுத்திக்கொண்டு ,கடவுளை
வழி படும் காரணங்களால் இன்று
தொழிலாளர் உரிமைகள் இழந்து
வேலை நேர நிர்னயமிழந்து,ஓய்வு-ஊதியங்களை இழந்து,வேலைகளை
-யும் இழந்து நிரந்தரமில்லா வேலை-
களை பெற்று,நிம்மதி இழந்து
இல்லாத கடவுளை நினைத்து வேதனையை தெரிவிக்க என
மீண்டும் மூடநம்பிக்கைகளை வளர்க்க,மீண்டும் அடிமைதனங்களை அரங்கேற்ற,
மீண்டும் மத ஆட்சி,மண்ணர்ஆட்சி
என,மக்களை சிறுக,சிறுக,மக்களை
மதவாதிகள் மாற்றி விட்டார்கள்
என்றால் நாம் மீண்டும் ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த
வாழ்க்கைக்கு சென்று விட்டால்
மீண்டும் இன்றைய நிலைக்கு
எந்த தலைமுறைகளும் திரும்ப
முடியாது என்பதை மட்டும்
நினைவு கொள்ளுங்கள்.

மதவாதிகள் என்றும் மன்னராட்சியை ஆதரிப்பவர்கள்,
மக்களாட்சியை வெறுப்பவர்கள்.
மக்களாட்சியின் பாதகங்களை
பெரிது படுத்தி,மன்னர் ஆட்சியின்
சாதகங்களை புகழ்வர்.இன்றுள்ள
நீதியைப்போல்,மன்னர்ஆட்சியில்
நிகழாது நீதி உடனே நிறைவேறும்
என ஆசை வார்த்தைகள் கூறுவார்-கள் ஆனால் மக்களின் பெரும்
பாலான நீதி மன்னர்களால் அநீதி-
களாகவே மாற்றப்படும் என்பதை மக்களிடம் மறைத்து விடுவார்கள்.
மத வாதிகளின் கொள்கையில்
மன்னனும் இருக்க முடியும் ஏழையாக மக்களும் இருக்க முடியும்
இதை விதி என்று மக்களின் தலை-யில். தட்டி அடக்கவும் மதவாதிகளு-க்கு தெரியும்.ஆனால் சனநாயக
நாட்டில் ஒவ்வொரு மனிதனின்
முன்னேற்றத்திற்கும் முயற்சி
எடுக்க வேண்டியது அரசின் கடமை
இதை விதி என்று விலகவோ,
அல்லது மக்களின் தலை எழுத்து
என தட்டிக் கழிக்க முடியாது.
சன் நாயக நாட்டில் கேள்விக்கனை
-கள் இல்லை என்றால் சனநாயகம்
இல்லை,மன்னராட்சியில். கேள்வியே. கேட்க முடியாது.ஆக
மக்கள் ஆட்சியில் மன்னனோ,
மன்னனின்அடக்குமுறை,ஆட்சி,
நீதி,போர்  ,போன்றவைகள் தேவை
இல்லை என்றானதோ,அது போல
மன்னர் கால குடும்ப முறைகளை
நாம் மாற்றவில்லை என்றால்,
மீண்டும்,மீண்டும்,மதவாதம் உயிர்
பெறும்,குடும்ப வாரிசு முறையாக
ஆட்சி அதிகாரமெல்லாம் உருவாக
தோன்றி ,வம்சாவளி. அதிகாரம்,
பின்பு மனிமகுடம்,அரச குடும்பம்
என பழைய நிலை உருவாகிவரும்.
வாழ்பவனை மரணத்தை நினைக்க
வைத்து,மரணம் அடைந்தோர்
பெயரை வாழ வைத்து ,வளர்வது
தான் மதம்.அதை உரிமையாகவும்,
முதலீடாகவும்,மாற்றிக்கொள்பவன்
மதவாதி,அவனுக்கு கீழ்படிபவர்கள்
மிகுதியாகும் போது,மத ஆதிக்க
வாதியாக மாறி,ஆட்சி ஏறி விடுகிறான்.

அன்று மன்னராட்சி காலத்தில் மாற்று வழி தேடி ஏங்கிய மக்கள் பலர் .அதே மக்களில் மன்னரில்லை
என்றால் ஆட்சி எவ்வாறு என்று
கேள்வி எழுப்பினார்கள் பலர்.
மன்னர் இல்லை என்றால் ஆட்சியே
இல்லை என்று மதவாதிகளின்
கூற்றில் மதிமயங்கி வாழ்ந்த,
மக்களின் வாயிலிருந்து
முடியாது,முடியாது,என்று ஆயிரம்
ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து
வந்ததை அன்றே முடியும் என்று
நம்பிக்கை வைத்து அன்று சில
மனித மனங்களில் ஏற்பட்ட நம்பிக்கைகளுக்கு ஏற்ப நாம் இன்று
மக்களாட்சியில் வாழ்ந்து வருகிறோம்.அன்று பலர் முடியாது
என கூறியது பொய்யாகிவிட்டது,
சிலரால் முடியும் என்ற நம்பிக்கை
இன்று மெய்யாகிவிட்டது,ஆக பலரால் முடியாது என்று கூறி விட்டால் என்றென்றும் முடியாது
என்றாகி விடாது.இவ்வாறெல்லாம்
கிடைக்கப்பெற்ற நம் சனநாயகத்தை
மதம் எனும் பெயரால் மதவாதிகளின்
தூண்டுதலில் பின்னால் நாம் செல்வோம் என்றால் இழப்பு,நம்
மக்களாட்சியாகத்தான் இருக்கும்.

இன்று செல்வந்தனை. ஆதரிப்பதால்
சில இலவசங்களை கொடுத்து
இல்லாதவனை கவர செய்வான்
நாளை உரிமைகளை பறித்து உரிமை கூலியை இல்லாதவையாக
செய்து வயித்துக்கூலியாக(வெறும்
உணவு) கொடுத்து தன்னுடைய
வேலைகளை பெற்றுக்கொள்வான்.
மற்றும் திருமணம்,மரணம் இந்த
இரு காரணங்களுக்காக மத வாதி-களை தேடி மக்கள் செல்லும்
காரணங்களாலால் தனக்கு விரோதமாக நடப்பவர்களை பழி
வாங்கவும் ,ஆளுமை செய்யவும்
பயன்படுத்திக்கொள்கிறான்.
குடும்பம் என்பது மதவாதிகள்
குழப்பமான வழியில் உருவாக்கி
வைத்துள்ளதால். அவர்களிடம்
இருந்து விலகவும்,முடியாமல்
சேரவும் முடியாமல் சிக்கி தவிக்கும்
நிலை உருவாகிவிடுகிறது.

இன்று மக்களை அவர்களிடமுள்ள
ஓட்டுகளை வைத்து,மதங்களை
வளர்க்க,மத ஆட்சியை உருவாக்க,
மீண்டும் அடக்கியாள முயற்சிக்கின்-றனர் .மக்களே இவர்களிடம்
எச்சரிக்கையாக இருந்து மதங்களை
விரும்புகிறவர்களை தவிர்த்து ,மதத்தை விட மனிதத்தைநேசிப்-
பவனை தேர்வு செய்து நம்
சனநாயகத்தை காப்பது நமது
கடமையாகும் .

                                       






 .

Sunday, 1 March 2015

சத்தியம்,மனசாட்சி

சத்தியம் என்பது தெய்வ நம்பிக்கை-யால் வருவது ,கடவுள் மேல் உள்ள
பயத்தால் வாக்கு மாறாமல் ,நடத்தை
மீறாமல் காப்பாற்றுவது ,இன்றுள்ள
மனிதர்கள் ஒரு சதவீதமாவது
இருப்பார்களா?என்பது சந்தேகமே
இதே கடவுள் மேல் அவநம்பிக்கை-யால்,வாழும் ஒருவனிடம் சத்தியத்தை எதிர் பார்த்தால்,
அவனும் கடவுள் நேரில் வரும் பொழுது பார்த்துக்கொள்ளலாம்
என்று,மீறி நடந்தால் இச் சத்தியம்
கேலிக்குறியாகி விடுகிறது.இன்று
ஒவ்வொரு மனிதர்களும் சந்திக்கும்
நிலையே இது.

மனசாட்சி என்பது ஒவ்வொரு மனித-னுக்கும். உள்ளது என்றாலும்,
ஒவ்வொருவரின் பாதிப்பு,பாதிப்பு
இல்லா,தன்மைக்கு தகுந்தவாறு
காணப்படுவதாகும்.இவை சமூகத்-தவர்களை. கண்டு கொள்ளாது,
குறைவான பாதிப்புகளை கொண்டோர் மனசாட்சி மிகுதியாக-உள்ளோராகவும்,பாதிப்புகளை
அதிகமாக கொண்டோர் மனசாட்சி
குறைவு உள்ளோராகவும் தோன்றுவர்.இதில் எவ்வகை பாதிப்பு்
-களை கண்டாலும், அதை மற்றவர்-களுக்கு நேரக்கூடாது என்று நினைத்து வாழ்வது,என்பது.    எல்லா விதமான
மக்களின் பகையையும்,கடவுள் எனும் பெயரை எதிர்க்க துணியும்
தண்மையும்,தன் உயிரே போனாலும்
மற்றவர்களுக்கு இவ்வகையான
தன்மைகள் நிகழக்கூடாது என நிலை எடுக்கும் ஒருவனால் தான்
இத்தகைய துணிவான முடிவு
எடுக்க முடியும்.


ஒருவன் சிறு தவறு செய்து விட்டத-ற்காக. நீ அவனை அடித்து விட்டால்
உன் மனசாட்சி உன்னை உறுத்தும்,
அதையே உன்னை ஒருவன் அடித்து
விட்டால் நீ. அவனை திருப்பி அடித்து
விட்டால் அது உன்னை உறுத்தாது.
ஆக இரண்டும் அடி தான் காரணம்
வேறு,வேறு அதனால் மனசாட்சி-யிலும் வேறுபாடு.கொலை என்பது
பெருங்குற்றம் என்றாலும் ஒரு
கொலையால் தன் குடும்ப நபரை
இழந்த ஒருவன் ,கொலை செய்தவனை இவன் கொலை
செய்தாலும் இவன் மனசாட்சி
உறுத்தாது,காரணம் பாதிக்கப்-
பட்டதனால் .ஆக மனசாட்சியை
வைத்து. நீதியையோ,
நேர்மையையோ கற்பிக்க முடியாது.
ஆகவே நீதியை பொதுவாக வைத்து
பாதிக்கப்பட்டவன் பாதிப்பிற்குள்-ளாக்கியவனை ,தண்டிக்காமல்
பெருகாமல் இருக்க ,பாதிக்கப்-பட்டவன். சார்பாக ,தண்டிப்பது
தண்டனை என்று சமூகம் உருவாக்கியது.ஆனால் சமூகம்
பாதிப்பிற்குள்ளானவர்கள் சார்பாக
இல்லாமல் சாதகமாக மாறும்
தருவாயில் ,அல்லது கடவுள் பார்த்து
கொள்வார் என்று நழுவும் தருவாயில் நேர்மை சமூகத்தை
ஆளாது,மாறாக மனசாட்சி தான்
ஆட்சி செய்யும் அவரவர்களுக்கு
தகுந்தாற்போல்


மனிதன் இயற்கையான உணவிற்-க்காக விலங்குகளைதேடி அலைந்து
வேட்டையாடித்தான் வாழ்க்கையை
தொடங்கினான்.பிறகு நிலங்களை,
மரம்,செடி,கொடிகளை ,வளர்த்து,
மனித உயிர்களுக்கு ஆபத்தை
உருவாக்காத விலங்குகளை
அறிந்து ,அவைகளை தன்னுடனே
வளர்த்து ஒரு இடத்தில் இருந்து
வாழ பழக ஆரம்பித்தான்.அந்த
காலத்தில் வாழ்ந்தவர்கள் எல்லோரும் தாய் வழி இனத்தவர்களே,தாயை வைத்தே
சொந்தமும்,அந்த தாயை வைத்து
உருவானவர்களே பந்தங்கள் ,
உறவு முறை என்று கூறிக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்,
தந்தை என்று எவரும் உரிமை
கொள்ளாத,உரிமை கொள்ள
முடியாத வகையில் வாழ்ந்த சமூகம்.


பின்பு வந்த காலங்களில் வீரம் என்பதை திறமையாகவும்,தகுதியா-கவும் உருவாக அதன் விளைவாக
வீரம் நிறைந்த ஆண்கள் ஆளுமை-யில் நிலம் ,மரம்,விலங்கு, என்று
வெற்றி பெற்றவன்தனி உடமையாக
சொந்தமாக்கிக்கொள்ள ஆரம்பித்தான் . போட்டிகள் அதிகமாகி ஆண்களுக்குள். கொலை,கொள்ளை,அதிகமாகி இதன் விளைவாக சமுதாயத்தை
கட்டுப்படுத்த தலைவன் என்று உருவான பின்பு தான்
பெண்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு
வீரம் நிறைந்த ,பொருள் நிறைந்த
ஆண்களும், தங்களுக்கு பிடித்த
பெண்களை பொருள் கொடுத்தும்
மிரட்டியும்,பணிய வைத்து
சொந்தம் கொண்டாடி அவள் மூலமாக தன் வாரிசை தக்க வைத்து
கொண்டு, தனக்கு பின் தன் ஆண்
வாரிசை தலைவனாகவும் மன்னன்
ஆகவும் ஆளவைத்தனர்.தனக்கு பிறக்கும் பெண்ணை பிற ஆண்கள்
கூடுவதை விரும்பாத தந்தை
வர்க்கம் ஆண்களையும் பொருள்
கொடுத்து வாங்கி பெண்ணின்
உடமையாக்கி வைத்தனர்.இவ்வகை
-யில் பொருள் கொடுத்து பெறப்பட்ட
ஆணும்,பெண்ணும் வேறு துணை
-களிடம் இணைய அனுமதியில்லை,
அதாவது ஆணிற்க்கு எத்தனை
பெண்களிடம் அவன் இணை
சேர்ந்தாலும்,அவன் அங்கீகரித்து
வைத்துள்ள பெண்ணிற்கு
பிறக்கும் குழந்தையையே. தன்
குழந்தை என எண்ணத்தோனும்,
ஆனால் விலை போகும் ஆணிற்க்கு
அந்த உரிமையில்லை ,அந்த பெண்
விரும்பி அந்த ஆணோடு இணைந்து
குழந்தை பெற்றுக்கொள்ளலாம்,
மாறாக அவள் வேறு ஆண்களோடு
இணைந்து குழந்தை பெற்றுக்
கொள்ளலாம். ஆனால் தந்தை
என்ற பெயர்,பொருள் கொடுத்து
பெற்ற ஆணையே சேரும்.
ஆகையால் சுதந்திரமாக வாழ்ந்த பெண்கள் இனம்,இவ் வகை
அடிமை தனங்களை. கண்டு
மிகவும் அச்சம் கொண்டு,இவ்வகை
ஆண்களின் கண்களில் அகப்பட்டு
விடாமல் வாழ்ந்து வந்தனர்.
இவ்வாறான காலகட்டத்தில் தான்
கடவுள்களின் பெயர்களை கூறி
நேர்வழி படுத்துவதற்காக
மறைநூல்கள். எனும் பெயரில்
திருமணங்களை கட்டாயமாகவும்,
அதற்கு பல தடைகள் கட்டுப்பாடுகள்
என உருவாக்கி,அதன் பின் இதே
போல பலபேர் பல கடவுள்களை
சட்ட திட்டங்கள். இடப்பட்டு,
அவைகளை பொருள் படைத்தவர்-களும்,மதகுருக்களும்,தங்களுக்கு
தகுந்தாற்போல் திரித்தும்,மறைந்து
சாதகமாகவும் தருணங்களில்,
இவைகளை அழிக்க வேறொருவர்
உருவாக,மக்களும் வெறுத்து
புதியவருக்கு ஆதரவு தர இணைய
என்று மறைந்த மதங்களும்
கடவுள்களும் பல உண்டு.அதில்
பிழைத்த மதங்களின் விளைவாக
கடவுள்கள் திருமணங்கள் தொடர்-
கதைகளாக வருகின்றன.அதில்
பெண்களுக்கு அவர்கள் மூலமாக
ஆண்களுக்கும் சோதனைகள்
தொடர்கின்றன.